1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ABIMUKATHEESH
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (15:47 IST)

நாளை பால் விநியோகம் பாதிக்கப்படாது: பால் முகவர் சங்கம்

கர்நாடகாவில் நடந்த கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழ்நாட்டில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். நாளை பந்த்யை முன்னிட்டு பால் விநியோகம் பாதிக்கப்படாது என பால் சங்க முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 


இதுகுறித்து பால் சங்க முகவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கர்நாடகா அரசை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்துக்கு தமிழநாடு பால் சங்க முகவர்கள் முழு ஆதரவு அளிக்கிறது. 
 
குழந்தைகள் மற்றும் முதியோர்கள், நோயாளிகளுக்கு பால் இன்றியமையாத பொருளாக விளங்குவதால் நாளை தங்குதடையின்றி எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பால் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.