1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mathipumigu Magalir Thittam: Financial Assistance for Women May Be Hiked to Rs 2500 on CM Vijay's Birthday

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு.. மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாற்றம்..

money
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதலே பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போதைய தவெக அரசின் மிக முக்கியமானதொரு புதிய அறிவிப்பு குறித்த தகவல்கள் தற்போது அரசியல் மற்றும் பொதுவெளியில் கசிந்து பரவி வருகின்றன.
 
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மாற்றியமைத்து, அதற்கு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்று புதிய பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
அதுமட்டுமன்றி, தற்போது வழங்கப்பட்டு வரும் தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி, மாதம் 2,500 ரூபாய் வழங்க அரசுத் தரப்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த அதிரடியான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதனால் தமிழகப் பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. எனினும், இது குறித்த முறையான அரசாணை அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனுக்கு பதவி!.. அதிமுகவில் எதிர்ப்பு அலை!...