1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 மார்ச் 2015 (16:13 IST)

திருமணமான பெண்ணை பலபேர் கொண்ட கும்பல் மீண்டும் மீண்டும் கற்பழித்த கொடூரம்

நாமக்கலில் இளம்பெண்ணை பலபேர் கொண்ட கும்பல் பலமுறை கொடூரமாக கற்பழித்துள்ளனர். அவர்களில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
இது குறித்து கைதானவர்கள் காவல் துறையினரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ”நாங்கள் மது போதையில் மாலை நேரத்தில், அந்த சுடுகாடு பகுதியில் அமர்ந்திருந்தோம். அன்றைய தினம், சைக்கிளில் வந்த தம்பதியரை வழிமறித்து, தகராறு செய்தோம்.
 

 
பின்னர், பாலகுமாரனை தாக்கிவிட்டு அந்த பெண்ணை சுடுகாடு பகுதிக்கு தூக்கிச்சென்று இருவர் பலாத்காரம் செய்தோம். அங்கிருந்தால் பலருக்கு தெரிந்துவிடுமென அதே பகுதியில் உள்ள, நண்பரின் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றோம்.
 
பின், மேலும் சில நண்பர்களையும் அழைத்து ஒவ்வொருவராக பலாத்காரம் செய்தோம். ஒரு சிலர், மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிரச்னை வெளியே தெரியக்கூடாது என, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தோம். ஆனால், காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.