1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (15:58 IST)

கடன் வாங்கிய பெண்னை படுக்கைக்கு அழைத்த முதியவர் கொலை : கணவன் மனைவி கைது

கடன் வாங்கிய பெண்னை படுக்கைக்கு அழைத்த முதியவர் கொலை : கணவன் மனைவி கைது

கடன் வாங்கிய பெண்ணை படுக்கைக்கு அழைத்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் மாணிக்கும்(68). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இவருடைய இரு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மாணிக்கம் பணத்தை வட்டிக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வரும் விமலா என்பவர் மாணிக்கத்திடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். மாதம் மாதம் வட்டிப் பணம் கொடுத்து வந்தார். சமீபத்தில் அவரை தொடர்பு கொண்ட மாணிக்கம், தன்னிடம் வாங்கிய பணத்தை உடனே தரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார்.

அதற்கு விமலா தற்போது மொத்தப் பணத்தையும் தன்னால் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால், விமலாவை படுக்கைக்கு அழைத்துள்ளார் மாணிக்கம்.  பணத்தைக் கொடு.. இல்லையேல் என் ஆசைக்கு இணங்கு என்று பேரம் பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த விமலா, இதுபற்றி அவரின் கணவர் விஜயிடம் கூறியுள்ளார். அதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 27ம் தேதி மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த விஜய், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டி கொலை செய்தார். அதன்பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

மாணிக்கம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் விஜய் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.