1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2016 (12:23 IST)

மதுரையில் மக்கள் நலக்கூட்டணியினர் உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி மதுரையில் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணியினர் உண்னாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததையொட்டி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் போராட்டங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.
 
சில கிராமங்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டின. அவர்கள் மீதான விசாரணைகள் நடந்து வருகின்றன. ஆனால் பல கிராம மக்கள் உச்ச நீதிமன்ற தடையினால் ஜல்லிக்கட்டை நடத்தவில்லை. ஜல்லிக்கட்டு இல்லாமல் அவர்கள் பொங்கலை கொண்டாடவில்லை.
 
அலங்காநல்லூர் உள்ளிட்ட மிக முக்கிய பகுதிகளில் போரட்டங்கள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒரே அணியில் நின்று மக்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.
 
அதன் ஒரு பகுதியாகவே மதுரையில் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டனியினர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.