மடிப்பாக்கம் ஏரி கரையைப் பலப்படுத்தும் பணி தீவிரம்
சென்னை மடிப்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, அதில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை சரிசெய்துள்ள அதிகாரிகள் கரையை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
20 அடி உயரம் கொண்ட சென்னை மடிப்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் அதன் கரையைப் பகுயில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனால் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமா நடைபெற்று வருகின்றது.
ஏரியில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்பணை அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பகுதிக்கு எந்த பாதிப்பு இல்லை என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.