வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: சனி, 12 மார்ச் 2016 (13:10 IST)

திமுகவுடனான பேரம் படியாததால் விஜயகாந்த் தனித்து போட்டி: அழகிரி

வருகிற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரேமலதா பேசியபோது, திமுக ஊழல் கட்சி என்றும்,தில்லு முல்லு கட்சி என்றும் பேசினார்.


 


இது குறித்து மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  விஜயகாந்த் பிரேமலதா திருமணத்தை தலைவர்தான் நடத்தி வைத்தார். நான்தான் முன்னின்று ஏற்பாடுகளையெல்லாம் செய்தேன். திமுகவை தில்லு முல்லு கட்சி என்று விமர்சிக்க தேமுதிகவுக்கு, பிரேமலதாவுக்கு தகுதியே இல்லை. கருணாநிதியை ஏமாற்றி பதவியை அனுபவிக்க நினைப்பவர்கள்தான் திமுகவில் அதிகம் இருக்கிறார்கள். திமுகவுடன் விஜயகாந்த் நடத்திய பேரம் படியாததால் அவர் தனித்து போட்டி முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.