வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (01:33 IST)

இன்று பொது வேலை நிறுத்தம் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு

இன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும், செப்டம்பர் 2ஆம் தேதி முக்கிய நகரங்களில், நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதி வணிகர்கள் பங்கேற்பார்கள்.
 
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு  போன்ற பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் வணிகர்கள் போராடி வருகின்றனர்.
 
மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பொதுத்துறை ஊழியர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியாக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
 
ஆனால், சமீபத்தில் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக வணிகர்கள் கடையடைப்பு நடத்தியுள்ளனர். எனவே, மீண்டும் அவர்களை கடையடைப்பு செய்யக் கோரி, யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்.
 
மேலும், தொழிலாளர்களின் போராட்டத்துக்கு  முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.