1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 மார்ச் 2016 (12:18 IST)

பாரின் சரக்கை வைத்துக்கொண்டு கூப்பிட்டிருந்தால் விஜயகாந்த் வந்திருப்பார் : காடுவெட்டி குரு நக்கல்

பாமக எம்.எல்.ஏவும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, விஜயகாந்தை கிண்டலடித்து பேசியுள்ளார்.


 

 
பாமக மேடைகளில் காடுவெட்டி குரு பேசினால், காதுகளைப் பொத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு அசிங்கமாகவும், நக்கலாகவும் பேசுவார். அதிமுக பிரமுகர்களை இவர் அசிங்கமாக விமர்சித்த மாதிரி இதுவரை யாரும் பேசியதில்லை.
 
இந்நிலையில், சமீபத்தில் பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பேசிய அவர், முதலில் திமுக தலைவர் கருணாநிதியை வம்புக்கிழுத்தார். அவர் பேசும்போது “உங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த வருவாரா என்று கேட்டதற்கு, பழம் கனிந்து பாலில் விழும் என்றும், நான் பால் சொம்போடு காத்திருக்கிறேன் என்று கூறினார்.
 
பழமும் கனியவில்லை. பாலிலும் விழவில்லை.. பால் புளித்துப் போய்விட்டது. நான் முன்பே கூறினேன். பாலை வைத்துக்கொண்டு பழத்தை எதிர்பார்த்தால் வராது. நல்ல ஃபாரின் சரக்காக வைத்துக்கொண்டு கூப்பிட்டால் உடனே வந்துவிடும் என்று. நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், விஜயகாந்த் எப்போதும் குடிபோதையில் தட்டுத்தடுமாறிதான் மேடைக்கு வருகிறார். இரண்டு பேர் அவரை தாங்கி பிடிக்க வேண்டியிருக்கிறது.
 
அவர் மேடையில் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. கிங்.. கிங் மேக்கர் என்றெல்லாம் பேசினார். அங்கிருந்த சிலர் அவர்  ‘கிங்காக்’ படம் பார்த்துவிட்டு பேசுகிறார் என்று நினைத்துவிட்டார்கள்” என்று கிண்டலடித்தார்.