1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (22:29 IST)

காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணி

காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற கோவை மாவட்ட தகுதியுள்ள வழக்குறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் வழக்கறிஞருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்கறிஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
 
சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.
 
விருப்பமுள்ள வழக்குறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.