வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 10 மே 2015 (22:20 IST)

அஷ்டமியா? எமகண்டமா?: ஜெயலலிதா வழக்கில் ஜெயம்தான் - அதிமுகவினரின் நம்பிக்கை!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு சொல்லும் மே 11 அஷ்டமி, 11 மணிக்கு எமகண்டம்.
 

 
இப்ப அது ஒண்ணும் பிரச்சனை இல்லையாம். அஷ்டமி எதிரிகளை வெல்லும் நாளாம். ராஜாக்கள் போருக்குப் போக அஷ்டமியில்தான் பூஜை செய்வாங்களாம். அதுதவிர தீர்ப்பு படிக்கத் தொடங்கும் 11 மணி என்பது சுக்கிர ஓரையாம்.
 
ராகு காலமா, நல்ல நேரமா என்பதைவிட என்ன ஓரை என்பது முக்கியமாம். அந்த வகையில் சுக்கிர ஓரை சுபிட்சமாம். இது மட்டுமா? தீர்ப்பு படிக்கும் கோர்ட் ஹால் நம்பர் 14. அதாவது கூட்டுத் தொகை 5.
 
அம்மாவுக்கு இப்போதைய ராசி நம்பர் ஐந்தாம். ஆக, கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எங்களுக்கு ஜெயம் ஜெயமே என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர்.
 
எப்படியெல்லாம் கணக்கு போடுறாங்க..! பொறுத்திருந்து பார்ப்போம்..!