செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (05:13 IST)

சென்னையில் ஜாக்டோ சார்பில் வேலைநிறுத்த போராட்டம்

சென்னையில் ஜாக்டோ சார்பில், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம்  நடைபெற்றது.
 

 
சென்னையில் ஜாக்டோ சார்பில், வள்ளுவர் கோட்டம் அருகே, ஆசிரியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
 
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், முந்தைய  ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 24 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.