செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (10:02 IST)

உளவுத்துறை எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்திற்குப் பலத்த பாதுகாப்பு

ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
மும்பை மற்றும் ஆமதாபாத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது.
 
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் உஷார் படுத்தப்பட்டுயுள்ளது விமான நிலையத்தில் நுழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
 
மேலும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது ஏர் இந்தியா அதிகாரி முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்படுகின்றது.
 
சென்னையில் இருந்து மும்பை, ஆகமதாபாத், டெல்லி போன்ற இடங்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் ஏர் இந்திய விமான பயணிகள் அனைவரும் மிகுந்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
 
அதைபோல் பன்னாட்டு விமானநிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.