தொடர்புடைய செய்திகள்
- திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டாதீங்க சி.எம். சார்!.. உதயநிதி டிவிட்!..
- திமுக அரசு எதிர்த்த 'விபி-கிராம்-ஜி' சட்டத்திற்கு தவெக அரசு ஒப்புதல்.. எதிர்ப்பு கிளம்புமா?
- ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ்!.. தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள?!...
- விஜயின் பொருளாதார இலக்கு ஆச்சர்யமா இருக்கு!.. நிதி ஆயோக் துணை தலைவர் பாராட்டு...
- பெண்ணிடம் பாலியல் சீண்டல்!.. தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!..
விஜய் வேண்டுகோள் ஏற்பு.. பரந்தூர் விமான நிலையம் கேன்சல்.. அதற்கு பதிலாக ரூ.20000 கோடியில் புதிய திட்டம்...!
மூத்த அரசியல் பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் பகிர்ந்துள்ள பிரத்யேக தகவல்களின்படி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சர்ச்சைக்குரிய பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடத் தயாராகி வருவதாக தெரிகிறது.
விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே விஜய் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதற்கு மாற்றாக, தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் வகையில் ஒரு பிரம்மாண்ட புதிய திட்டம் அறிமுகமாகவுள்ளது. அதன்படி, வீடுகளுக்கே நேரடியாக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் பைப் கேஸ் திட்டம் சுமார் 20,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட செலவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக டெல்லி ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கவிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சரின் இந்த நகர்வு மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ள அதே வேளையில், மத்திய அரசின் இந்த இணக்கமான முடிவு புதிய தமிழக அரசின் அரசியல் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
Edited by Siva
