1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2016 (15:48 IST)

வைகோ வெற்றி பெற்றால் ரூ.10 கோடி பரிசு - ’கள்’ இயக்க தலைவர் அறிவிப்பு

“கள்” போதைப்பொருள் என்ற வாதத்தில் வைகோ வெற்றி பெற்றால் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவருமான நல்லசாமி கூறியுள்ளார்.
 

 
கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய நல்லசாமி, ”கள் போதைப்பொருள் என்று கூறிய வைகோவை வாதிட கள் இயக்கம் அழைப்பு விடுத்தது. ஆனால், அவர் எங்களுடன் முன் வரவில்லை. 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வைகோ வாதிட முன்வருவது ஏற்புடையதாக இருக்கும்.
 
இந்த வாதத்தில் வைகோ வெற்றி பெற்றால் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து கள் இயக்கம் கலைக்கப்படும். அதன் பிறகு அரசியலில் வைகோவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மதிமுக மறுபடியும் புது எழுச்சி பெறும். 2021 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பும் வைகோவிற்கு உருவாகும். உடனடியாக வைகோவிடம் பதிலை எதிர்பார்த்து கள் இயக்கம் காத்திருக்கிறது.
 
கேரளத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கேரளத்தில் உள்ளது போல தமிழகத்தில் மதுக் கடைகளை முழுவதுமாக மூடிவிட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.