நான் இந்த ஆட்டத்திற்கு வரல: பேராசிரியர் அன்பழகன் புது முடிவு
நான் இந்த ஆட்டத்திற்கு வரல: பேராசிரியர் அன்பழகன் புது முடிவு
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபை தேர்தலில் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என திமுக தலைமை அறிவித்தள்ளது.
இந்த நிலையில், திமுக எம்.பி.திருச்சி சிவாவின் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டார். அப்போது, வரும் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.