வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 9 ஜனவரி 2015 (15:05 IST)

இனி மேலாவது திருந்திக் கொள்ள வேண்டும் - மைத்திரிபால சிறிசேனா வெற்றி குறித்து கருணாநிதி

வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கடந்த இனி மேலாவது திருந்தி கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை வீழ்த்தி சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ”இலங்கையில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கடந்த செயல்களுக்கு யார் பொறுப்பு என்று எண்ணிப்பார்த்து இனி மேலாவது திருந்தி கொள்ள வேண்டும்.
 
போர் குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பது அப்படியே உள்ளது. ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாடு தொடரும்” என்று கூறியுள்ளார்.