வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 22 மே 2015 (21:18 IST)

"கிரானைட் உரிமையாளர்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை" - சகாயத்திடம் விளக்கம்

கிரானைட் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று விசாரணை நடத்திவரும் சகாயத்திடம் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 
 
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி தற்போது சகாயம் தனது இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
 

 
இந்நிலையில் இன்று அகில இந்திய கிரானைட் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பாரெட்டி, சகாயத்தை சந்தித்து சங்கத்தின் சார்பில் விளக்க அறிக்கை அளித்தார். அதில், "கிரானைட் உரிமையாளர்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை.
 
முறைப்படிதான் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விரைவில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் இது போன்ற அறிக்கை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.