தொடர்புடைய செய்திகள்
- தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
- திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!
- தவெக ஆட்சியை கவிழ்த்தே தீருவோம்.. சீனியர் திமுக பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா ஜூனியர் டீம்?
- குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..
- கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..
முருகனின் 6வது படை வீடு பழமுதிர்ச்சோலையில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் உள்பட பலர் பங்கேற்பு..
முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடாகப் போற்றப்படும் மதுரை பழமுதிர்சோலை அருள்மிகு சோலைமலை முருகன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்த ஆன்மீகச் சிறப்புமிக்க விழாவைக் காண்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் திரண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜைகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன. இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித நீர் அடங்கிய கலசங்களைப் புறப்பாடு செய்தனர். தொடர்ந்து, ராஜகோபுரம் மற்றும் விமானக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நற்பதமாக நடைபெற்றது. அப்போது கூடிருந்த பக்தர்கள் "அரோகரா" கோஷமிட்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு ஆன்மீகப் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்து பல்வேறு முக்கியக் கோயில்களைப் புனரமைக்கும் பணிகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Siva
