வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2016 (08:18 IST)

நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும்: ஆளுநர் ரோசையா பொங்கல் வாழ்த்து

அறுவடை பண்டிகையானது நமது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும் என்று கூறி ஆளுநர் ரோசையா வாழ்த்து கூறியுள்ளார்.



 


 



தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
பொங்கல் மற்றும் சங்கராந்தியை கொண்டாடுபவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த அறுவடை பண்டிகையானது நமது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும்.
 
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க அர்ப்பணிப்போம். தூய்மை மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை மேம்படுத்துவதில் பங்கு அளிப்போம். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.