தூத்துக்குடியில் அரசு வேலை வாய்ப்பு
தூத்துக்குடியில் அரசு வேலை வாய்ப்பு
தூத்துக்குடியில் மருத்துவ பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் மருத்துவமனைப் பணியாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணி காலியாக உள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம், மதுரை என்ற முகவரிக்கு 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, தேர்வு செய்து பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.