வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2016 (17:18 IST)

புளுகினி தமிழச்சி; பொம்பள பொறுக்கி திலீபன் மகேந்திரன்: போராளிகளுக்குள் போர்!

புளுகினி தமிழச்சி; பொம்பள பொறுக்கி திலீபன் மகேந்திரன்: போராளிகளுக்குள் போர்!

சுவாதி படுகொலை, ராம்குமார் மரணம் இந்த இரண்டு சம்பவத்திலும் தமிழக மக்களை அதிகமாக குழப்பிய பெருமை திலீபன் மகேந்திரன் மற்றும் தமிழச்சி இவர்கள் இருவருக்கும் உண்டு.


 
 
உண்மையோ, பொய்யோ தங்களுக்கு வரும் தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பெரும் பரபரப்பை உருவாக்கினார்கள். தமிழச்சியை திலீபன் மகேந்திரன் புகழ்வதும், திலீபன் மகேந்திரனை போராளி போராளி என தமிழச்சி புகழ்வதும் அவர்களின் பதிவுகளில் காண முடியும்.
 
ஆனால் தற்போது இருவருக்கும் இடையே ஒரு போரே வெடித்துள்ளது. திலீபன் மகேந்திரன் ஒரு பொம்பள பொறுக்கி எனவும், பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தவன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார் பிரான்சில் உள்ள தமிழச்சி.
 
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திலீபன் மகேந்திரன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் தமிழச்சியை கழுவி ஊற்றி வருகிறார். இன்று பதிவிட்ட ஒரு பதிவில் புளுகினி தமிழச்சி என கூறியுள்ளார்.


 
 
பாசமாய் இருந்த போராளிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தூற்றுவது இவர்கள் இருவரும் இதுவரை கூறி வந்த தகவல்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்தால் நாற்றமடிக்கிறது. அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் எல்லாம் கம்மெண்டுகளாக வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாரடிக்கிறார்கள்.
 
இந்த தமிழச்சி தான் முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் மீது தமிழகத்தில் இது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.