வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (04:59 IST)

தமிழக அரசு ஊழியர்களுக்கு இனிப்பு செய்தி வழங்கிய முதல்வர் ஜெயலலலிதா

தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை 2020ஆம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2012ம் ஆண்டிலிருந்து 4 ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம்  கடந்த 30.6.2016 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
 
எனவே, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை  கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த தல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.