ஊழியர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு!
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கூட்டணி சார்பில் நாளை பேரணி நடத்தப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாராட்சி ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகராட்சி போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், திமுக தலைமையில் நாளை பேரணி நடக்க உள்ளதால், ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் எனவும், வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.