1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 14 ஜூலை 2016 (17:14 IST)

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 

 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்த சீனிவாசன்(45), இன்று காலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
 
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அருகே ஒரு மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து, முகத்தில் என சரமாரியாக வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.
 
அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, காவல் துறையினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.