1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2015 (22:22 IST)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


 
 
சென்னையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உள்ள வீடுகளில் முதல் மாடி வரை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் சாலையோரங்களிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு கட்சி தலைவர்கள் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நாளை காலை 11 மணியளவில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிந்தாதரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகர், சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலம், கோட்டூர்புரம் பாலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த மக்களைச் சந்திக்கிறார் என்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.