திமுக பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு
இன்று மாலை தமிழகத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளன
இந்த நிலையில் திமுக பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருப்பதால் திமுக பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாடு ஒத்திவைக்க அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டிஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் கேஎன் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்எஸ் பாரதி, வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்