வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: புதன், 21 அக்டோபர் 2015 (11:46 IST)

கல்கி குழுமத்தின் தீபம் இதழ் பொறுப்பாசிரியர் மனைவியுடன் தற்கொலை

கல்கி குழுமத்திலிருந்து வெளிவரும் தீபம் இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாச ராகவன்(50). இவரது மனைவி ஜானகி(37). இவர்களது மகன் அனிருத். இவர்  நெசப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். ராகவன் மனைவி பள்ளி மாணவர்களுக்கு மாலை வேலையில் டியூசன் சொல்லித்தருவது வழக்கம்.இரு தினங்களூக்கு முன் மகனை தனது உறவினர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தனர்.


 

இந்நிலையில் நேற்று மாலை ராகவனின் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது தரையில் ஜானகி பிணமாகக் கிடந்தார். ராகவன் மற்றொரு அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து கதவை உடைத்து அவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ராகவன் தனது வீட்டிற்கான தவணை பணத்தை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராகவன் மனைவியின் உடலை கீழே இறக்கி வைத்துவிட்டு வேறு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.