கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதி கோரி பயணிகள் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சூழலில், அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும், திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சில தரப்பினர் விமர்சித்தனர். குறிப்பாக, அவர் ஒரு 200 ரூபாய் உபி என்றும் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் கண்டுபிடித்துள்ளனர்.
இவர் சமீபத்தில் திமுகவில் உள்ள சத்யராஜ் மகள் திவ்யாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நெட்டிசன்கள் அவருடைய உண்மை சொரூபத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
Edited by Siva
