1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. consumer court order to give ten birriyani to man

ஹோட்டல் பிரியாணியில் பூச்சி!.. வாலிபருக்கு அடிச்ச லக்கி பிரைஸ்!..

biriyani
இந்தியா முழுவதும் உள்ள மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மதிய உணவாக பிரியாணி இருக்கிறது. இந்தியாவில் டோர் டெலிவரி செய்யும் மொபைல் உணவு ஆப்களில் பிரியாணிதான் அதிக எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. அதுவும் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பலரும் மதிய உணவாக பிரியாணி சாப்பிடுகிறார்கள். இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.. ஒரு பிரியாணியின் விலை ஹோட்டலை பொறுத்து 100 முதல் 300 வரை விற்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில்தான் சாப்பிட சென்ற இடத்தில் பிரியாணியில் இருந்த பூச்சி காரணமாக ஒருவருக்கு ஒரு சூப்பர் ஆஃபர் கிடைத்திருக்கிறது. புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் பிரியாணி சாப்பிட போயிருக்கிறார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பிரியாணியில் ஒரு பூச்சி செத்து கிடந்திருக்கிறது. இதைப்பற்றி அவர் கேட்டதற்கு ஹோட்டல் நிர்வாகம் சரியாக பதிலளிக்கவில்லை.
 
அதில், கோபமடைந்த அவர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு அந்த ஹோட்டல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் இழுப்பீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அடுத்த 5 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தலா இரண்டு என மொத்தம் 10 பிளேட் பிரியாணியை அவருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.
 
அடுத்த கட்டுரையில்
ஊழல் பெரும் அளவில் குறைஞ்சிருக்கு.. ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை: அன்புமணி