திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2025 (10:50 IST)

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக, கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி  சிதம்பரம் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
 
"சென்னையைத் தவிர வேறு எந்த தமிழக நகரத்திற்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை. இந்தூர் மற்றும் ஆக்ராவில் உள்ள மெட்ரோ திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்து, மிகப்பெரிய செலவீனத்தை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாம் நிலை நகரங்களில்  மெட்ரோ வேலை செய்யாது" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது மத்திய அரசின் கருத்தல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
முன்னதாக, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான மத்திய அரசின் நிராகரிப்பால் ஏமாற்றம் அடைவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். 2017 மெட்ரோ ரயில் கொள்கையின் கீழ் உள்ள 20 லட்சம் மக்கள் தொகை அளவுகோல் பொருத்தமற்றது என்று அவர் வாதிட்டார்.
 
ஸ்டாலின், இந்த அளவுகோல் ஆக்ரா, இந்தூர் போன்ற நகரங்களுக்கு ஏன் தளர்த்தப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன், நிராகரிப்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, முடிவை மறுபரிசீலனை செய்ய கோரினார்.
 
Edited by Mahendran