காங்கிரஸ் தரம் தாழ்ந்து விட்டது: இல. கணேசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு, காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கும்பகோணத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடைபெற இன்னும் 6 மாதங்கள் உள்ளன. இந்த விழாவில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துதர முன்வர வேண்டும். இந்த விழாவை மிகச் சிறப்பாக நடைபெற மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தவறாக பேசிவிட்டேன் என கூறியிருந்தாலே, இந்த அளவுக்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. அவரது பேச்சு காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது என்றார்.