1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2016 (17:02 IST)

கள்ளக்காதலனுடன் உல்லாசம்: இடையூறு செய்த மாமியாரை கொலை செய்த பெண்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையால் இறுக்கி பிடித்து கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
 
தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த அந்தோணி (38). கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருடைய தாய் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று பதற்றத்துடன் மனைவி தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த அந்தோணி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, தனது தாய் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து சிதம்பரம் நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். 
 
தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதையடுத்து, சம்பவத்தின்போது வீட்டில் அவருடைய மனைவி மட்டும் தனியாக இருந்ததால், மனைவி மீது ......
 மேலும் படிக்க அடுத்தப்பக்கம் பார்க்க

...சந்தேகம் அடைந்த போலீஸார், அவரிடம் வீட்டில் வைத்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால், பின்னர், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.


 
 




இந்த கொலை குறித்து அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தபோது கூறியதாவது, 
 
சில மாதங்களுக்கு முன்பு எனக்கும், என்னுடைய வீடு அருகே வசித்து வந்த வாலிபருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. தினமும் காணவர் கடைக்கு சென்றதும், அந்த வாலிபரை போனில் அழைத்து வீட்டுக்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம்.

இதை என்னுடைய கணவரும், அவருடைய தயார் ராஜரீகமேரியும் கண்டித்தனர். மேலும், அந்த வாலிபர் வீட்டுக்கு வந்து செல்வதை எனது கணவரிடம் அவருடைய தாயர் கூறிவந்தார், இதனால் என்னுடைய கணவர் கோபம் அடைந்து, என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார் 
 
இதனால், அவருடைய தாயர் மீது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அவருடைய தாயரை, நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தலையை தலையணையால் அமுக்கி பிடித்து கொலை செய்தேன். அப்போது, நீண்ட நேரம் ஆகியும் அவருக்கு உயிர் போகவில்லை இதனால், அவரது முகத்தில் இரும்பு கம்பியை வைத்து தாக்கினேன். இதில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.