1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (18:16 IST)

சென்னையில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது - அமைச்சர் வேலூமணி

சென்னையில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


 
 
இன்று நடைபெற்ற நிவாரண பணிகள் ஆய்வுகூட்டதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் "சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. சில இடங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது அதையும் சரிசெய்து வரும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகளை துரிதபடுத்த சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 200 குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்கள் கமிஷனர் விக்ரம்கபூர் தலைமையில் இயங்கும் என்று" அவர் தெரிவித்தார்.