சென்னை பாரிமுனை அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து
சென்னை பாரிமுனையில் எஸ்.பி.ஐ வங்கி அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள். இதனால் கட்டடத்தின் அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராஜாஜி சாலையில் உள்ள 3 மாடிகளைக் கொண்ட பழமைவாய்ந்த, அந்தத் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்திற்கு மின் கசிவே காரணம் என்று கூறப்படுகிறது-
தீ விபத்தின் சேத மதிப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.