தொடர்புடைய செய்திகள்
- பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!
- நடுவழியில் திடீரென நின்ற சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகள் மத்தியில் பதட்டம்..!
- சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்?
- சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?
- சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!
மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்.. அதிரடி அறிவிப்பு..!
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் இனி நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த நேரங்களில் இனி 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பயணிகளின் நேரத்தை சேமிக்கவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால அட்டவணையின்படி, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் மூன்று நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
மற்ற சாதாரண நேரங்களில் வழக்கம் போல 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலகம் செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் நோக்கில், சேவைகளை மேம்படுத்தி வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
