தொடர்புடைய செய்திகள்
- லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் மனு: விசாரணை ஒத்திவைப்பு!
- சென்னையில் உருவாகும் மாபெரும் கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா: முதற்கட்டப் பணிகள் தீவிரம்!
- சென்னை மட்டுமல்ல மதுரை, கோவைக்கும் ஏசி பஸ்.. 2000 புதிய ஏசி பேருந்துகள் வாங்க முடிவு...
- சென்னையில் இன்று 40-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் ரத்து.. என்ன காரணம்?
- செந்தில் பாலாஜி சகோதரர் முன்ஜாமின் மனு.. தள்ளுபடியாகுமா? கைது செய்யப்படுவாரா?
தங்கக் காசு மோசடி வழக்கு: சென்னை பெண் ஆய்வாளர் அதிரடி கைது...
சென்னையில் அரங்கேறியுள்ள தங்கக் காசு மோசடி வழக்கில், காவல்துறை பெண் ஆய்வாளர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக காவல் துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஷீலா மேரி என்பவரையே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முறைப்படி கைது செய்துள்ளனர்.
பெரிய அளவில் நடைபெற்ற இந்த தங்கக் காசு மோசடி வழக்கில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதும், மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு இவர் உடந்தையாக செயல்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி புகார் எழுந்த உடனே ஷீலா மேரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் ஷீலா மேரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை ஆய்வாளரே, பொதுமக்களை ஏமாற்றிய மோசடி கும்பலுக்குத் துணையாக இருந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
Edited by Siva
