1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (08:14 IST)

நிரம்பிய மதுராந்தகம் ஏரி: வெள்ள அபாயம் இருக்கா?

செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது.
 
நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு ஏரி குளங்கள் நிரம்பின. இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது. 
 
அந்தவகையில் செங்கல்பட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழுகொள்ளளவான 23.3 அடியை எட்டியது. ஆனால், மதுராந்தகம் ஏரிக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர் திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.