வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 22 ஜூலை 2015 (00:57 IST)

ஜூலை 23 - முன் ஜாமீன் ரத்து: தயாநிதி மாறனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்

திமுக முன்னாள் மத்திய தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து செய்யக் கோரும் மனு நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி விசாரணைக்குவர உள்ளது.
 

 
பிஎஸ்என்எல் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
பிஎஸ்என்எல் முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
 
மேலும், தயாநிதி மாறன் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தடை நீக்கப்படும் என்று நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் முறைகேடு சம்பந்தமாக திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் கேட்கப்பட்ட பல கேள்விளுக்கு தாயாநிதி மாறன் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றும்,  சில கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
 
இதனால், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முக்கியத் தகவல்கள் கிடைக்கும். எனவே, அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்பதால், தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வியாழக்கிழமை அன்று நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த மனு விசாரணைக்கு வரவில்லை.
 
இதனையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என சிபிஐ வழக்கறிஞர் சீனிவாசன் புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜூலை 23ஆம் தேதி சிபிஐ மனு மீது விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.