வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (05:31 IST)

காவிரி விவகாரம்: மத்திய அமைச்சருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? வைகோ கேள்வி

தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அதிமுகவினர், மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, கரூர் அருகே உள்ள பெரியதிருமங்கலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து வீதி வீதியாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், காவிரியின் குறுக்கே அணைகளை கட்டியே தீருவோம் என்றும், இரண்டு அணைகளை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா கூறியுள்ளார்.
 
தமிழகத்தின் வாழ்வையே அழிக்கக் கூடிய வகையில், மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா பேசியதைக் கண்டித்து அதிமுகவினர் ஒரு ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லையே ஏன்? அதிமுகவினர் வன்முறை போராட்டத்தை காவல்துறை வேடிக்கை பார்ப்பது  ஆபத்தானது என்றார்.