வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 1 டிசம்பர் 2014 (08:05 IST)

ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் - கருணாநிதி

ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்துக்கு விரோதம் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 11 ஆம் தேதி தீர்ப்பு கூறியது.
 
அன்றே, ஜாதி வாரியான கணக்கெடுப்பை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை முடிவு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று நான் அறிக்கை விடுத்தேன்.
 
இந்நிலையில்தான் கர்நாடக அரசு அம் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்குமென்று அறிவித்துள்ளது. இது பாராட்டுக்குரியது.
 
தமிழக அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.