வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2016 (18:43 IST)

கரூரில் பாமக பிரமுகர் வாகனம் மோதி ஒருவர் பலி

கரூர் அருகே தேர்தல் பணியில் கட்சி வேலையில் ஈடுபட்டிருந்த பா.ம.க பிரமுகர் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.


 

 
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் செந்தில் குமரன் (வயது 34), இவர் வரும் சட்டமன்ற தேர்தலையடுத்து பா.ம.க வின் கட்சிப்பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தார். கரூர்-கோவை ரோட்டில் கரூரிலிருந்து க.பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்த போது, லட்சுமிபுரம் பகுதி அருகே கார் நிலை தடுமாறி கவிழ்ந்தது. 
 
இந்த விபத்தில் காரை ஒட்டி சென்ற செந்தில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் பயணம் செய்த மற்றொருவரான பா.ம.க பிரமுகரான வினோத் (வயது 22) விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
 
மேலும் இச்சம்பவம் அறிந்த பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், கார்த்திகேயன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள செந்தில்குமரனின் உறவினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 
 
இது குறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் பா.ம.க வினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.