வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2015 (15:16 IST)

”ராகுல் காந்தி தாய்லாந்து எதுக்கு போனார்ன்னு சொல்ல முடியுமா?”: ஹெச்.ராஜா நக்கல்!

"ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு. அந்தநாடு எதுக்கு பேமஸ்ன்னு ஊருக்கே தெரியும். உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்திருக்கிறார்" என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசுகையில், "மோடி வெளிநாடு போகிறாரே அவர் எங்கு தூங்குகிறார் என்பது  உள்ளிட்டவற்றை வெளிப்படையாக சொல்கிறோம். ஆனால் ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு. அந்த நாடு எதுக்கு பேமஸ்ன்னு ஊருக்கே தெரியும். இதை வெளியில் சொன்னால் மக்கள் எதனால் அடிப்பாங்க தெரியுமா? உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.  இதெல்லாம் வேஷம்.”
 
இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.