வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2016 (05:03 IST)

தமிழக அரசு சார்பில் அம்மா அழைப்பு மையம் தொடக்கம்

தமிழகத்தில், பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா அழைப்பு மையம் தொடங்கப்பட உள்ளது.
 

 
தமிழகத்தில், பொது மக்களின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், அம்மா அழைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது.
 
இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தால், அது குறித்து, சம்பந்தப்பட்ட துறைக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டு, அதற்கு உடனடி  தீர்வு காணப்படும்.
 
இந்தப் புதிய திட்டத்தை, முதல்வர்  ஜெயலலிதா இன்று தொடங்கி உள்ளார். இந்த புதிய திட்டம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என அரசு நம்புகிறது.