வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2014 (16:58 IST)

காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் சங்கரன்கோயில், ராமநாதபுரம் நகராட்சிகள் உட்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6.8.2014 முதல் துவங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 13.8.2014.
 
இடைத்தேர்தல் 18.9.2014 அன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.