செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2015 (08:46 IST)

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

தீபாவளியை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் ஆரம்பமாகிறது.


 
 
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், " சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு நவம்பர் 9 ஆம் தேதி ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு நவம்பர் 11 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
திருச்சியில் இருந்து சென்னை வழியாக சந்திரகாசிக்கு நவம்பர் 8 ஆம் தேதியும், நாகர்கோவிலில் இருந்து பாட்னாவுக்கு நவம்பர் 9 ஆம் தேதியும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.