வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 30 டிசம்பர் 2015 (04:27 IST)

ஜனவரி 13: சென்னையில் புத்தக திருவிழா

சென்னையில் புத்தக திருவிழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
 

 
இது குறித்து, தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில், புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், சுமார் 200 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெற உள்ளது. 
 
இந்த புத்தக திருவிழாவுக்கு நுழைவுச்சீட்டு நன்கொடை ரூ.5 வசூலிக்கப்படும். இதில் கிடைக்கும் தொகை முழுவதும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.