செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 15 மே 2015 (18:21 IST)

கலெக்டர் அலுவலகம் அருகில் நள்ளிரவில் உடல் எரிப்பு - கவுரவக் கொலையா?

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சடலத்தை எரித்துள்ளனர். இது கவுரவக் கொலையா? அல்லது நரபலியா என சந்தேகம் எழுந்துள்ளது.
 
சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள மயானத்தில் இரவோடு இரவாக மர்ம நபர்கள் சடலைத்து எரியூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

 
இதனை மயானத்தில் எரியூட்டும் ஊழியராக பணிபுரியும் சுப்பையா நேற்று காலை மயானத்துக்கு சுப்பையா சென்றபோது, அங்கு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டுள்ளார். முகம் மற்றும் உடல் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்துள்ளது. ஆனால், ஒரு கை மட்டும் எரியாமல் இருந்துள்ளது.
 
இது குறித்து சிவகங்கை நகர்புற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது எரியூட்டப்பட்ட உடல் அருகே ஒரு எலுமிச்சம் பழமும், அதில் 40க்கும் மேற்பட்ட குண்டூசிகளும் குத்தப்பட்டு இருந்துள்ளது. மேலும், மயானத்திற்கு 4 சக்கர வாகனம் வந்து சென்ற அடையாளமும் இருந்தது.
 
இது தவிர 4 திசைகளிலும் நாட்டுக்கோழி முட்டையில் குங்குமம் தடவி வீசி எறியப்பட்டுள்ளது. இது கவுரவ கொலையாகவோ அல்லது நரபலியாகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தடவியல் நிபுணர்களும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.