தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக ஆதரவா? பாஜகவிடம் நெருங்குகிறதா திமுக?
- இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..
- 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..
- எந்த ஹீரோவும் சிக்கலயே!.. யார வச்சி படமெடுக்க?!.. நொந்துபோன வெங்கட்பிரபு!...
- பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...
’அண்ணாமலை அன்பு கூட்டம்’ என்ற பெயரில் நற்பணி மன்றம்.. கோவையில் பரபரப்பு..
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் நிதின் நபின் ஆகியோரை சந்தித்து பேசிய அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்ட மத்திய பொறுப்புகள் அல்லது ராஜ்யசபா எம்பி பதவி போன்ற அனைத்து சலுகைகளையும் நிராகரித்துள்ளதாக தெரிகிறது.
அதிமுக உடனான கூட்டணி மற்றும் திராவிட அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே அண்ணாமலையின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட தற்போதைய எந்தவொரு திராவிட அல்லது பிராந்திய கட்சியிலும் இணைய போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார். மாறாக, தேசியவாத கொள்கையை முன்னிறுத்தி ஒரு புதிய சுதந்திரமான அரசியல் கட்சியைத் தமிழ்நாட்டில் தொடங்க அவர் ஆயத்தமாகி வருகிறார்.
கோயம்புத்தூரில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களும், 'அண்ணாமலை அன்பு கூட்டம்' என்ற நற்பணி மன்றத்தின் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருவதும் இந்த வதந்திகளை உறுதிப்படுத்துகின்றன.
Edited by Siva
