தொடர்புடைய செய்திகள்
- என்ன செய்யப்போகிறது சிங்கப்பெண் அதிரடிப்படை?.. இன்று விஜய் துவங்கி வைக்கிறார்!..
- தவெக பக்கம் தாவும் திமுக முக்கிய நிர்வாகிகள்!.. முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!..
- நன்றி அறிவிப்பு கூட்டம் எல்லாம் கிடையாது.. அதுக்கு பதிலா ரத்த தான முகாம்.. இதுதான் தவெக ஆட்சி...
- சாமியே எங்க ஊருக்குள்ள வந்த மாதிரி இருக்குது.. 56 வருடங்களாக பஸ் இல்லாத கிராமத்தில் இன்று ஓடுது பஸ்.. இதுதாண்டா மாற்றம்...
- கோரிக்கை வைத்த 20 நாட்களில் பேருந்து வசதி.. திராவிடம் 60 வருடங்களில் சாதிக்காததை 10 நாளில் சாதித்த தவெக அரசு...
ஊழல் பெரும் அளவில் குறைஞ்சிருக்கு.. ஆனால் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை: அன்புமணி
தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில் மிக நல்ல மாற்றம் தென்படுவதாகவும், முந்தைய காலங்களை விட ஊழல் பெருமளவில் குறைந்திருப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பிட அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், எந்தவொரு புதிய அரசும் தங்களின் திட்டங்களையும் கொள்கைகளையும் முழுமையாக களத்தில் செயல்படுத்தி காட்ட குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்றார். தவெக அரசு பதவியேற்ற இந்த மிக குறுகிய காலத்திலேயே நிர்வாக ரீதியாக நேர்மறையான மாற்றங்கள் தெரிய தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், குறிப்பாக அரசு துறைகளில் ஊழல் பெரும்பான்மையாக குறைந்திருப்பது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனாலும் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை.
மாற்று அரசியலை முன்வைத்து முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஒரு மாதத்திற்குள்ளாகவே இத்தகைய நல்லெண்ணத்தைப் பெற்றுள்ள தவெக அரசு, வரும் காலங்களில் மக்கள் நலத் திட்டங்களை மேலும் சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
